Published:Updated:

`உண்மை என்ன?!'- சிறை என வெளியான செய்தி குறித்து லிங்குசாமி தன்னிலை விளக்கம்

இயக்குநர் லிங்குசாமி

இந்த வழக்கில் பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது.

Published:Updated:

`உண்மை என்ன?!'- சிறை என வெளியான செய்தி குறித்து லிங்குசாமி தன்னிலை விளக்கம்

இந்த வழக்கில் பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது.

இயக்குநர் லிங்குசாமி
காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை உறுதி என சென்னை செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார் லிங்குசாமி.

`ஆனந்தம்', `ரன்', `ஜி', உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் லிங்குசாமி. தவிர `வேட்டை', `பையா', `அஞ்சான்' உள்பட சில படங்களையும் இவரது நிறுவனம் தயாரித்துள்ளது.

அறிக்கையில்
அறிக்கையில்

இயக்குநர் லிங்குசாமி, சில வருடங்களுக்கு முன்னர் கார்த்தி, சமந்தாவை வைத்து 'எண்ணி ஏழு நாள்' படத்தை தயாரிப்பதற்காக பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக அவர் கடனாக பெற்றதாகவும், அந்த கடனுக்காக அவர் 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஒன்றை கொடுத்திருக்கிறார். அது வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பியது என்றும் இதனால் பிவிபி நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது என்றும் தகவல்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி

இது குறித்து லிங்குசாமி அளித்துள்ள அறிக்கையில், ``இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கில் பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் கொடுத்த மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்.'' என்று தெரிவித்திருக்கிறார்.