Published:Updated:

`இது திப்புசுல்தானின் கதையல்ல!’ - சுல்தான் பட எதிர்ப்புக்கு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம்

திப்பு சுல்தான் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பைத் திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரித்த அமைப்புகளுக்கு விளக்கமளித்துள்ளது டிரீம் வாரியர் பிக்சர்ஸ்

Published:Updated:

`இது திப்புசுல்தானின் கதையல்ல!’ - சுல்தான் பட எதிர்ப்புக்கு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம்

திப்பு சுல்தான் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பைத் திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரித்த அமைப்புகளுக்கு விளக்கமளித்துள்ளது டிரீம் வாரியர் பிக்சர்ஸ்

ரெமோ படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் `சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். திண்டுக்கல்லைச் சுற்றிக் கடந்த ஒருமாத காலமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடவூர் அரண்மனையைச் சுற்றி கிராமம்போல செட் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழுவினர் சென்றனர்.

எதைக் காண்பிக்க வேண்டும் என முடிவு செய்யும் உரிமை அந்தத் திரைப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது. இது சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ்

தகவல் கேள்விப்பட்டு அங்கு வந்த சில அமைப்பினர், `திப்பு சுல்தான் கதையைப் படமாக்குகிறீர்கள். கதையில் வரலாற்றுப் பிழை உள்ளது. மலைக்கோட்டை கோயிலில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ``இந்தத் திரைப்படம் திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், அதைத் திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாதென்று கூறி ஓர் அமைப்பினர் படப்பிடிப்புத் தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தானின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமீப காலமாக விளம்பர நோக்கில் திரைப்படங்களைத் தனிநபர்களும் சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்துவருகிறது. ஒரு திரைப்படம் எதைக் காண்பிக்கக் கூடாதென்பதை உறுதி செய்யத் தணிக்கைக்குழு உள்ளது. இதைத் தவிர்த்து எதைக் காண்பிக்க வேண்டும் என முடிவு செய்யும் உரிமை அந்தத் திரைப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது.

Dream warrier letter
Dream warrier letter

இது சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்த ஒரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளியின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், வரலாற்றுத் தலைவர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் சாதி மத அடையாளம் பூசி அவர்களின் வாழ்க்கையையும், நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.