Published:Updated:

அகஸ்தியா தியேட்டரை வாங்கி மல்டி ப்ளக்ஸ் கட்டுகிறாரா நயன்தாரா? - உண்மை என்ன?

நயன்தாரா

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அகஸ்தியா தியேட்டர் கொரோனாவுக்குப்பிறகு மூடப்பட்டாலும் அதுகுறித்த பரபரப்புகள் அடங்கியபாடில்லை.

Published:Updated:

அகஸ்தியா தியேட்டரை வாங்கி மல்டி ப்ளக்ஸ் கட்டுகிறாரா நயன்தாரா? - உண்மை என்ன?

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அகஸ்தியா தியேட்டர் கொரோனாவுக்குப்பிறகு மூடப்பட்டாலும் அதுகுறித்த பரபரப்புகள் அடங்கியபாடில்லை.

நயன்தாரா
நயன்தாரா, வட சென்னையின் அடையாளமான அகஸ்தியா திரையரங்கை வாங்கி மல்டி பிளக்ஸ் தியேட்டர் கட்டப்போவதாக தகவல் பரவ, உண்மைதானா என்பதை அறிய தியேட்டர் தரப்பில் விசாரித்தோம்.
அகஸ்தியா தியேட்டர்
அகஸ்தியா தியேட்டர்

சென்னையின் முக்கிய அடையாளம் வடசென்னை என்றால், அந்த வடசென்னையின் முக்கிய அடையாளம் அகஸ்தியா தியேட்டர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அகஸ்தியா தியேட்டர் கொரோனாவுக்குப்பிறகு மூடப்பட்டாலும் அதுகுறித்த பரபரப்புகள் அடங்கியபாடில்லை. ஏற்கெனவே, மெட்ரோ பணிகளுக்காக அகஸ்தியா தியேட்டரின் முன்பகுதி இடத்தை அரசு கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீதமுள்ள இடத்தை நடிகை நயன்தாரா பெரிய தொகைக்கு வாங்கிவிட்டார் என்றும் அந்த இடத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டப்போகிறார் என்றும் செய்திகள் தீயாய் பரவிவருகின்றன. இந்த நிலையில், அகஸ்தியா தியேட்டர் நிர்வாகத்தினரிடம் 'இந்தத் தகவல் உண்மையா?' என்று கேட்டோம்.

"அகஸ்தியா தியேட்டர் தனிநபர் சொத்து கிடையாது. அகஸ்தியா அறக்கட்டளையின் கீழ்தான் இயங்கி வந்தது. அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்பதால் இதனை விற்கமுடியாது. ஏற்கனவே, மெட்ரோ பணிகளுக்காக கொஞ்சம் இடத்தை கொடுத்துவிட்டோம். மீதமுள்ள இடத்தில் சங்கரா நேத்ராலயாவுடன் இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டவிருக்கிறோம். உண்மையில் இதற்கான, ஒப்பந்தம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. அதனால், நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என்று பரப்பப்படும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை. இதற்கான, பேச்சுவார்த்தைக்கூட நடக்கவில்லை. முழுக்க முழுக்க பொய்யான தகவல் இது. பொதுமக்கள் நம்பவேண்டாம்" என்கிறார்கள்.