Published:Updated:

"காலம் பேசாது; ஆனால், பதில் சொல்லும்" - நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் ( vikatan )

சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது...

Published:Updated:

"காலம் பேசாது; ஆனால், பதில் சொல்லும்" - நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!

சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது...

ரஜினிகாந்த் ( vikatan )

பேராசியர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் இன்றை சென்னையில் வெளியிடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
vikatan

அந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "நான் மும்பையில் ஷூட்டிங்கில் இருந்தபோது ராஜா சார் போன் பண்ணி இந்த நிகழ்ச்சி பத்தி சொன்னார். 30ம் தேதிதான் ஷூட்டிங் முடியுது. சீக்கிரம் முடிஞ்சிடுச்சுனா, நிச்சயம் வந்திடுறேன்னு சொல்லியிருந்தேன். ராமாயணம் எழுதியதால்தான் கம்பருக்கு பெருமை. அதே மாதிரி, இந்த நூலை எழுதியதால் சாலமன் பாப்பையா சாருக்கு மிகப் பெரிய புகழ் வந்துசேரும். திருச்சி சிவா பேசும்போது, 'இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுங்க. இல்லைனா, ஸ்டாலின் முதல்வரானதும் அதை நாங்க பண்ணிடுவோம்'னு சொன்னார். அதை கேட்டவுடனே, மாஃபா. பாண்டியராஜன் சார் பதறிப்போய், 'இல்லை இல்லை நாங்களே இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுறோம்'னு சொன்னார். ஆக மொத்தம், இந்த நூல் எல்லோருக்கும் போய் சேர்ந்தால் ரொம்ப சந்தோசம்.

இந்த நூல் எல்லா இளைஞர்களுக்கு போய் சேரணும். காலம் பேசாது; ஆனால், பதில் சொல்லும். நான் பாப்பையா சாரை 'வேலைக்காரன்' பட விழாவுலதான் பார்த்தேன். பாலசந்தர் சார்தான் அவரை எனக்கு அறிமுகம் பண்ணி வெச்சார். ஆரம்பத்துல என்னை மாதிரி பேசி ஜாலியா கைத்தட்டல் வாங்கினார். ஆனால் அவர் பேசப்பேச அவர் மொழிநடை அப்படியே மாறிடுச்சு. அவருடைய அந்த அறிவாற்றலை பார்த்தவுடன் எனக்கு வேர்க்க ஆரம்பிச்சுடுச்சு.

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா
vikatan

கம்பர் பத்தி, ராமாயணம் பத்தி, தமிழ் இலக்கியங்களை பத்தி பேசின அந்த வாய் கொஞ்சம் ரஜினிகாந்த் பத்தியும் பேசுனது எனக்கு பெருமை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் என்கிட்ட பேசுவார். அவருக்கு இந்த இளைய தலைமுறை மேல் அதீத அக்கறை இருக்கு. அவர் நூறாண்டு ஆரோக்கியமா வாழந்து இந்த நூல் மாதிரி நிறைய பொக்கிஷங்களை மக்களுக்கு கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன்" என்றார்.