<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>டைம் மிஷின்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>ட்டு வயசாகுற ராகுலின் பிடிவாதம் அதிகமாகிடுச்சு. அவனை ‘டைம் மெஷின்’ உள்ளே அனுப்பி, ‘‘போய் நீ இத்தனை வருஷமா எப்படியிருந்தே எனப் பார்த்துட்டு வா’’ன்னு அம்மா அனுப்பினாங்க.</p>.<p>தொட்டிலில் இருந்த அவனை, அழும்போதெல்லாம் அம்மா ஓடிவந்து தூக்கி கவனிச்சுக்கிட்டது, அவனுக்கு உடம்பு சரியில்லாதப்போ வீட்டுல எல்லோருமே பதறி கவனிச்சது, அப்பா மேலே படுத்துக்கிட்டு கதை கேட்டது என எல்லோரின் அன்பையும் அக்கறையையும் பார்த்துட்டு திரும்பினான் ராகுல்.<br /> <br /> ‘‘ஸாரிம்மா... இனிமே வீணான பிடிவாதத்தை விட்டுருவேன்’’ என்றான்.<br /> <br /> <strong> - அதிதி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>திணறல்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெ</strong></span>ளியூரில் வசிக்கும் பாட்டிக்கு மணியார்டர் செய்ய, தபால் அலுவலகத்துக்குச் சென்று செலுத்திவிடுமாறு பத்தாம் வகுப்பு கணேஷிடம் 2,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தனுப்பினார் அப்பா சுந்தர்.</p>.<p>தபால் அலுவலகத்தில் ஃபார்ம் வாங்கியவன், அதில் எப்படி எழுதுவது என்று தெரியாமல் அலுவலரிடம் கேட்டான். <br /> <br /> ‘‘இதுகூடத் தெரியாதா தம்பி?’’ என்று வாங்கி விலாசம் கேட்டவரிடம், ‘‘ஆன்லைன் மணி டிரான்ஸ்பர் தெரியும் சார்... இதுல எனக்குப் பழக்கமில்லை’’ என்றான் அப்பாவியாக.<br /> <br /> <strong> - எஸ்.அபிநயா</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உயிர்களிடத்தில் அன்பு</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வி</strong></span>டுமுறையில் ஓவிய வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தருண், “அம்மா, நேற்று அப்பா வாங்கிட்டு வந்த கேக்ல மீதியை டப்பாவுல போட்டு வெச்சீங்களே...’’</p>.<p>டப்பாவிலிருந்து எடுத்துப் பார்த்த அம்மா, ‘‘கெட்டு போயிருக்குடா... தெரு நாய்க்குப் போட்டுடலாம்” என்றார்.<br /> <br /> “நம்ம வீட்டு நாயா இருந்தா அப்படிச் செய்வோமா? வேணாம்மா, குப்பையில போட்டுடலாம்’’ என்றான் தருண்.<br /> <br /> ‘‘ஸாரிடா!’’ என்ற அம்மா, தருணின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தார்.<br /> <strong><br /> - ஜோஷனா</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூண்டுக்கிளிகள்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்</strong></span>கூல் அட்மிஷனுக்கான இன்டர்வியூவுக்கு மகன் அபிஷேக்கை தயார் படுத்துகிறார் அப்பா நீலகண்டன்.<br /> <br /> ‘‘சிங்கப்பூரின் அதிபர் யார்?’’<br /> <br /> ‘‘ஹலிமா யாகோப்’’</p>.<p>‘‘வெரிகுட்! நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த வயதில் நிலாவில் இறங்கினார்?’’<br /> <br /> ‘‘39 வயதில்’’<br /> <br /> காலிங்பெல் சிணுங்க, அப்பாவும் பிள்ளையும் சென்று கதவைத் திறந்தனர். வெளியே ஒருவர். ஏழு குடித்தனங்கள் கொண்ட அந்தக் காலனியில், ‘‘ரயில்வேயில் வேலை பார்க்கும் ஏகாம்பரம் வீடு எது?’’ எனக் கேட்டார்.<br /> <br /> ‘‘தெரியலையே’’ என்று விழித்தனர்.<br /> <br /> <strong> - அ.யாழினி பர்வதம்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong> ஓவியங்கள்: ரமணன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span><span style="color: rgb(0, 0, 255);"><strong> மணியாடர் முறை 1792ஆம் ஆண்டில் பிரிட்டனில் தொடங்கியது.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...</strong></span><br /> <br /> இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.<br /> <br /> <span style="color: rgb(153, 51, 0);"><strong>முகவரி: </strong></span>சுட்டி குட்டிக் கதைகள், சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>டைம் மிஷின்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>ட்டு வயசாகுற ராகுலின் பிடிவாதம் அதிகமாகிடுச்சு. அவனை ‘டைம் மெஷின்’ உள்ளே அனுப்பி, ‘‘போய் நீ இத்தனை வருஷமா எப்படியிருந்தே எனப் பார்த்துட்டு வா’’ன்னு அம்மா அனுப்பினாங்க.</p>.<p>தொட்டிலில் இருந்த அவனை, அழும்போதெல்லாம் அம்மா ஓடிவந்து தூக்கி கவனிச்சுக்கிட்டது, அவனுக்கு உடம்பு சரியில்லாதப்போ வீட்டுல எல்லோருமே பதறி கவனிச்சது, அப்பா மேலே படுத்துக்கிட்டு கதை கேட்டது என எல்லோரின் அன்பையும் அக்கறையையும் பார்த்துட்டு திரும்பினான் ராகுல்.<br /> <br /> ‘‘ஸாரிம்மா... இனிமே வீணான பிடிவாதத்தை விட்டுருவேன்’’ என்றான்.<br /> <br /> <strong> - அதிதி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>திணறல்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெ</strong></span>ளியூரில் வசிக்கும் பாட்டிக்கு மணியார்டர் செய்ய, தபால் அலுவலகத்துக்குச் சென்று செலுத்திவிடுமாறு பத்தாம் வகுப்பு கணேஷிடம் 2,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தனுப்பினார் அப்பா சுந்தர்.</p>.<p>தபால் அலுவலகத்தில் ஃபார்ம் வாங்கியவன், அதில் எப்படி எழுதுவது என்று தெரியாமல் அலுவலரிடம் கேட்டான். <br /> <br /> ‘‘இதுகூடத் தெரியாதா தம்பி?’’ என்று வாங்கி விலாசம் கேட்டவரிடம், ‘‘ஆன்லைன் மணி டிரான்ஸ்பர் தெரியும் சார்... இதுல எனக்குப் பழக்கமில்லை’’ என்றான் அப்பாவியாக.<br /> <br /> <strong> - எஸ்.அபிநயா</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உயிர்களிடத்தில் அன்பு</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வி</strong></span>டுமுறையில் ஓவிய வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தருண், “அம்மா, நேற்று அப்பா வாங்கிட்டு வந்த கேக்ல மீதியை டப்பாவுல போட்டு வெச்சீங்களே...’’</p>.<p>டப்பாவிலிருந்து எடுத்துப் பார்த்த அம்மா, ‘‘கெட்டு போயிருக்குடா... தெரு நாய்க்குப் போட்டுடலாம்” என்றார்.<br /> <br /> “நம்ம வீட்டு நாயா இருந்தா அப்படிச் செய்வோமா? வேணாம்மா, குப்பையில போட்டுடலாம்’’ என்றான் தருண்.<br /> <br /> ‘‘ஸாரிடா!’’ என்ற அம்மா, தருணின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தார்.<br /> <strong><br /> - ஜோஷனா</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூண்டுக்கிளிகள்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்</strong></span>கூல் அட்மிஷனுக்கான இன்டர்வியூவுக்கு மகன் அபிஷேக்கை தயார் படுத்துகிறார் அப்பா நீலகண்டன்.<br /> <br /> ‘‘சிங்கப்பூரின் அதிபர் யார்?’’<br /> <br /> ‘‘ஹலிமா யாகோப்’’</p>.<p>‘‘வெரிகுட்! நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த வயதில் நிலாவில் இறங்கினார்?’’<br /> <br /> ‘‘39 வயதில்’’<br /> <br /> காலிங்பெல் சிணுங்க, அப்பாவும் பிள்ளையும் சென்று கதவைத் திறந்தனர். வெளியே ஒருவர். ஏழு குடித்தனங்கள் கொண்ட அந்தக் காலனியில், ‘‘ரயில்வேயில் வேலை பார்க்கும் ஏகாம்பரம் வீடு எது?’’ எனக் கேட்டார்.<br /> <br /> ‘‘தெரியலையே’’ என்று விழித்தனர்.<br /> <br /> <strong> - அ.யாழினி பர்வதம்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong> ஓவியங்கள்: ரமணன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span><span style="color: rgb(0, 0, 255);"><strong> மணியாடர் முறை 1792ஆம் ஆண்டில் பிரிட்டனில் தொடங்கியது.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...</strong></span><br /> <br /> இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.<br /> <br /> <span style="color: rgb(153, 51, 0);"><strong>முகவரி: </strong></span>சுட்டி குட்டிக் கதைகள், சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002</p>