<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காடு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ந்தக் காட்டுக்குள் வேட்டைக்காரன் ஒருவன், தான் வைத்த பொறியில் தெரியாமல் தன் கால்களை வைத்துவிட்டு துடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒரு மரவெட்டி, ‘‘நீ வேட்டையாடும் விலங்குகளும் இப்படித்தானே துடிக்கும்'' என்றபடி விடுவித்தான்.<br /> <br /> ‘‘நீ மட்டும் மரங்களை வெட்டுகிறாயே. அவற்றுக்கும்தானே உயிர் இருக்கிறது'' என்றான் வேட்டைக்காரன்.<br /> <br /> ‘‘நான் பட்டுப்போன மரங்களை மட்டுமே வெட்டுகிறேன். நீ எப்படி... இறந்த விலங்குகளையே வேட்டையாடுகிறாயா?''<br /> <br /> அமைதியாக இருந்த வேட்டைக்காரன், ‘‘நாளை முதல் நானும் உன்னுடன் மரம் வெட்ட வருகிறேன்'' என்றான்.<br /> <br /> அதைக் கேட்டு காடு மகிழ்வது போல காற்று அடித்தது.<br /> <br /> <strong>- ஜெ.சா.யங்கேஷ்வர், குமாரபாளையம்.</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முள் பாதை</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>து மலை மீது இருக்கும் ஓர் ஊர். அங்கிருந்து 5 கிலோமீட்டர் இறங்கி வந்தால்தான், உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியும். பேருந்து வசதி கிடையாது. அதனால், நிறைய பிள்ளைகள் ஆரம்பப் பள்ளியுடன் நின்றுவிடுவார்கள். அந்த ஊரிலிருந்து சங்கீதா, ஆறாம் வகுப்புக்குச் செல்கிறாள்.<br /> <br /> ‘‘பொம்பளை புள்ளையை எதுக்கு இவ்வளவு தூரம் அனுப்பணும்?’’ என்று மற்றவர்கள் பேசியதை சங்கீதாவின் பெற்றோர் பொருட்படுத்தவில்லை.<br /> <br /> ‘‘நான் போய்ட்டு வரேன்ம்மா’’ என்ற சங்கீதா, புத்தகப் பையில் சிறிய வெட்டுக்கத்தியையும் எடுத்துக்கொண்டாள். ‘‘இது எதுக்கு?’’ என்று அக்கம்பக்கத்தில் கேட்டார்கள்.<br /> <br /> ‘‘போற பாதையில இருக்கிற முள் செடிகளை வெட்டி விலக்கிட்டே போவேன். என் பின்னாடி வர்றவங்க சிரமம் இல்லாம வரட்டும்’’ என்றாள் சங்கீதா.<br /> <br /> <strong>- சே.தாசன் பீவி, கீழக்கரை</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காற்றின் மொழி</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வி</strong></span>டுமுறை பரபரப்புகள் முடிந்து ஜூன் முதல் தேதி... காற்றின் வழியே ஊட்டியும் கொடைக்கானலும் பேசிக்கிட்டாங்க. ‘‘என்னப்பா கொடை, உன் இடத்துக்கு வந்த கூட்டமெல்லாம் போயாச்சா?’’<br /> <br /> ‘‘ஆமாம் ஊட்டி... இப்போதான் நிம்மதியா மூச்சு விட முடியுது. மனுஷங்க நம்மளை ரசிக்க வர்றாங்க, ஓய்வு எடுக்கிறாங்க. எல்லாம் சரி. ஆனா, நம்ம மேலேயே குப்பையைக் கொட்டி, தண்ணீரை வீணாக்கி... படாத பாடு படுத்திடறாங்க’’<br /> <br /> ‘‘கொஞ்சம் பொறுத்துக்க கொடை. பெரியவங்களோட வந்த குழந்தைகள் இதுபத்தி புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச வருஷத்துல அவங்க நம்மை நல்லபடியா கவனிச்சுப்பாங்க’’ என்றது ஊட்டி.<br /> <br /> அந்தக் காற்றின் மொழி, உங்களுக்குக் கேட்டுச்சா ஃப்ரெண்ட்ஸ்!<br /> <br /> <strong>- வ.ஆரவ், சென்னை</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">லட்டு எங்கே?</span></strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஹா</strong></span>லுக்கு வந்த அம்மா அங்கே விளையாடிக்கொண்டிருந்த இலக்கியா மற்றும் தமிழழகியைப் பார்த்து, ‘‘கிச்சன்ல லட்டு வெச்சிருந்தேன். யாரு எடுத்தீங்க?’’ என்று கேட்டார்.<br /> <br /> ‘‘லட்டுவா... எப்போ வாங்கி, எப்போ வெச்சீங்க? விஷயமே தெரியாதே’’ என்றாள் இலக்கியா.<br /> <br /> ‘‘நான் என்னிக்கு கிச்சன் பக்கம் வந்திருக்கேன்’’ என்றாள் தமிழழகி.<br /> <br /> அப்போது தூங்கி எழுந்து வந்த குட்டித் தம்பி இனியன், ‘‘அம்மா, நான் பாக்கெட்ல வெச்சிருந்த லட்டுவை தூங்கி எழுந்து பார்த்தா, யாரோ நசுக்கி இருக்கீங்க. யார் செஞ்சீங்க?’’ என்று முறைப்புடன் கேட்டான்.<br /> <br /> <strong> - மங்கையர்க்கரசி, திருநெல்வேலி</strong></p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>ஓவியங்கள்: ரமணன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...</strong></span><br /> <br /> இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.<br /> <br /> முகவரி: சுட்டி குட்டிக் கதைகள், <br /> <strong> சுட்டி விகடன், </strong><br /> 757, அண்ணா சாலை, சென்னை- 600 002</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காடு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ந்தக் காட்டுக்குள் வேட்டைக்காரன் ஒருவன், தான் வைத்த பொறியில் தெரியாமல் தன் கால்களை வைத்துவிட்டு துடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒரு மரவெட்டி, ‘‘நீ வேட்டையாடும் விலங்குகளும் இப்படித்தானே துடிக்கும்'' என்றபடி விடுவித்தான்.<br /> <br /> ‘‘நீ மட்டும் மரங்களை வெட்டுகிறாயே. அவற்றுக்கும்தானே உயிர் இருக்கிறது'' என்றான் வேட்டைக்காரன்.<br /> <br /> ‘‘நான் பட்டுப்போன மரங்களை மட்டுமே வெட்டுகிறேன். நீ எப்படி... இறந்த விலங்குகளையே வேட்டையாடுகிறாயா?''<br /> <br /> அமைதியாக இருந்த வேட்டைக்காரன், ‘‘நாளை முதல் நானும் உன்னுடன் மரம் வெட்ட வருகிறேன்'' என்றான்.<br /> <br /> அதைக் கேட்டு காடு மகிழ்வது போல காற்று அடித்தது.<br /> <br /> <strong>- ஜெ.சா.யங்கேஷ்வர், குமாரபாளையம்.</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முள் பாதை</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>து மலை மீது இருக்கும் ஓர் ஊர். அங்கிருந்து 5 கிலோமீட்டர் இறங்கி வந்தால்தான், உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியும். பேருந்து வசதி கிடையாது. அதனால், நிறைய பிள்ளைகள் ஆரம்பப் பள்ளியுடன் நின்றுவிடுவார்கள். அந்த ஊரிலிருந்து சங்கீதா, ஆறாம் வகுப்புக்குச் செல்கிறாள்.<br /> <br /> ‘‘பொம்பளை புள்ளையை எதுக்கு இவ்வளவு தூரம் அனுப்பணும்?’’ என்று மற்றவர்கள் பேசியதை சங்கீதாவின் பெற்றோர் பொருட்படுத்தவில்லை.<br /> <br /> ‘‘நான் போய்ட்டு வரேன்ம்மா’’ என்ற சங்கீதா, புத்தகப் பையில் சிறிய வெட்டுக்கத்தியையும் எடுத்துக்கொண்டாள். ‘‘இது எதுக்கு?’’ என்று அக்கம்பக்கத்தில் கேட்டார்கள்.<br /> <br /> ‘‘போற பாதையில இருக்கிற முள் செடிகளை வெட்டி விலக்கிட்டே போவேன். என் பின்னாடி வர்றவங்க சிரமம் இல்லாம வரட்டும்’’ என்றாள் சங்கீதா.<br /> <br /> <strong>- சே.தாசன் பீவி, கீழக்கரை</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காற்றின் மொழி</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வி</strong></span>டுமுறை பரபரப்புகள் முடிந்து ஜூன் முதல் தேதி... காற்றின் வழியே ஊட்டியும் கொடைக்கானலும் பேசிக்கிட்டாங்க. ‘‘என்னப்பா கொடை, உன் இடத்துக்கு வந்த கூட்டமெல்லாம் போயாச்சா?’’<br /> <br /> ‘‘ஆமாம் ஊட்டி... இப்போதான் நிம்மதியா மூச்சு விட முடியுது. மனுஷங்க நம்மளை ரசிக்க வர்றாங்க, ஓய்வு எடுக்கிறாங்க. எல்லாம் சரி. ஆனா, நம்ம மேலேயே குப்பையைக் கொட்டி, தண்ணீரை வீணாக்கி... படாத பாடு படுத்திடறாங்க’’<br /> <br /> ‘‘கொஞ்சம் பொறுத்துக்க கொடை. பெரியவங்களோட வந்த குழந்தைகள் இதுபத்தி புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச வருஷத்துல அவங்க நம்மை நல்லபடியா கவனிச்சுப்பாங்க’’ என்றது ஊட்டி.<br /> <br /> அந்தக் காற்றின் மொழி, உங்களுக்குக் கேட்டுச்சா ஃப்ரெண்ட்ஸ்!<br /> <br /> <strong>- வ.ஆரவ், சென்னை</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">லட்டு எங்கே?</span></strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஹா</strong></span>லுக்கு வந்த அம்மா அங்கே விளையாடிக்கொண்டிருந்த இலக்கியா மற்றும் தமிழழகியைப் பார்த்து, ‘‘கிச்சன்ல லட்டு வெச்சிருந்தேன். யாரு எடுத்தீங்க?’’ என்று கேட்டார்.<br /> <br /> ‘‘லட்டுவா... எப்போ வாங்கி, எப்போ வெச்சீங்க? விஷயமே தெரியாதே’’ என்றாள் இலக்கியா.<br /> <br /> ‘‘நான் என்னிக்கு கிச்சன் பக்கம் வந்திருக்கேன்’’ என்றாள் தமிழழகி.<br /> <br /> அப்போது தூங்கி எழுந்து வந்த குட்டித் தம்பி இனியன், ‘‘அம்மா, நான் பாக்கெட்ல வெச்சிருந்த லட்டுவை தூங்கி எழுந்து பார்த்தா, யாரோ நசுக்கி இருக்கீங்க. யார் செஞ்சீங்க?’’ என்று முறைப்புடன் கேட்டான்.<br /> <br /> <strong> - மங்கையர்க்கரசி, திருநெல்வேலி</strong></p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>ஓவியங்கள்: ரமணன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...</strong></span><br /> <br /> இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.<br /> <br /> முகவரி: சுட்டி குட்டிக் கதைகள், <br /> <strong> சுட்டி விகடன், </strong><br /> 757, அண்ணா சாலை, சென்னை- 600 002</p>