<p><strong>நெ</strong>கிழிப்பையில் கட்டிய</p><p>பார்சல் தேநீரை</p><p>இருவிரல்களுக்கு இடையே பிடித்து </p><p>சுமந்துவருகிறான்</p><p>தலைமுறைகள் பலவாய்</p><p>பால்மாடுகள் வளர்த்த</p><p>குடும்பத்தின் நிகழ்காலச் சிறுவன்.</p><p>அவன் நினைவுகளில்</p><p>ஓடிக்கொண்டிருக்கிறது</p><p>அப்பா சொல்லி விளக்கியிருந்த</p><p>பால் நன்றாய்ச் சுரந்திருக்கும்</p><p>பால்மாட்டின் மடிக்கு</p><p>உவமையாய்</p><p>தேநீர் நிரம்பிய</p><p>நெகிழிப்பை பார்சல்.</p><p><em>- சாமி கிரிஷ்</em></p>.<p><strong>தூளி</strong></p><p><strong>ம</strong>கனும் மகளும் </p><p>அன்பளித்த புடவைகளை </p><p>பேரன் பேத்திகளுக்குத்</p><p>தூளிகளாக்கிவிடுகிறார்கள்</p><p>அம்மாக்கள்.</p><p><em>- திருவெங்கட்</em></p>.<p><strong>தனிமையின் நிழல்</strong></p><p><strong>நி</strong>லவு இருந்தும்</p><p>என்னால் பாட இயலவில்லை.</p><p>ஒற்றைப்பனையும் </p><p>இல்லாத சூழலை </p><p>எப்படி ஏற்றுக்கொள்ளும் </p><p>தேய்ந்த நிலவு?</p><p><em>- ச.ப.சண்முகம்</em></p>.<p><strong>மாறிய கதை</strong></p><p><strong>வ</strong>றுமையின் </p><p>பொருட்டு </p><p>மந்திரக் குழலெடுத்து </p><p>அவன் </p><p>ஊதத் தொடங்குகிறான்</p><p>வீட்டிலிருந்த</p><p>பீடை எலிகள் </p><p>ஒவ்வொன்றாய்</p><p>வெளியேறத் தொடங்குகின்றன.</p><p>மெதுவாய்</p><p>பின்தொடர்ந்த </p><p>எலிகளோடு </p><p>சமூகத்தில் அவனை</p><p>வறுமைக்குத் தள்ளிய</p><p>அத்தனை எலிகளும் </p><p>அணிவகுப்பில்</p><p>சேர்ந்துகொண்டன.</p><p>ஆறு ஒன்று </p><p>எதிர்ப்படுகிறது</p><p>எலிகள் அத்தனையும் </p><p>வீடு திரும்பிவிட்டன.</p><p><em>- பா.ரமேஷ்</em></p>.<p><strong>பாசியாடை</strong></p><p><strong>ஓ</strong>டாமல் தேங்கிய நீரினை </p><p>வெட்கம் பாடாய்ப் படுத்தும்</p><p>ஆடையாய்ப் பாசியை </p><p>அவசரமாய் நெய்து </p><p>தன் அங்கத்தில் உடுத்தும்.</p><p> <em>- வல்லம் தாஜுபால்</em></p>
<p><strong>நெ</strong>கிழிப்பையில் கட்டிய</p><p>பார்சல் தேநீரை</p><p>இருவிரல்களுக்கு இடையே பிடித்து </p><p>சுமந்துவருகிறான்</p><p>தலைமுறைகள் பலவாய்</p><p>பால்மாடுகள் வளர்த்த</p><p>குடும்பத்தின் நிகழ்காலச் சிறுவன்.</p><p>அவன் நினைவுகளில்</p><p>ஓடிக்கொண்டிருக்கிறது</p><p>அப்பா சொல்லி விளக்கியிருந்த</p><p>பால் நன்றாய்ச் சுரந்திருக்கும்</p><p>பால்மாட்டின் மடிக்கு</p><p>உவமையாய்</p><p>தேநீர் நிரம்பிய</p><p>நெகிழிப்பை பார்சல்.</p><p><em>- சாமி கிரிஷ்</em></p>.<p><strong>தூளி</strong></p><p><strong>ம</strong>கனும் மகளும் </p><p>அன்பளித்த புடவைகளை </p><p>பேரன் பேத்திகளுக்குத்</p><p>தூளிகளாக்கிவிடுகிறார்கள்</p><p>அம்மாக்கள்.</p><p><em>- திருவெங்கட்</em></p>.<p><strong>தனிமையின் நிழல்</strong></p><p><strong>நி</strong>லவு இருந்தும்</p><p>என்னால் பாட இயலவில்லை.</p><p>ஒற்றைப்பனையும் </p><p>இல்லாத சூழலை </p><p>எப்படி ஏற்றுக்கொள்ளும் </p><p>தேய்ந்த நிலவு?</p><p><em>- ச.ப.சண்முகம்</em></p>.<p><strong>மாறிய கதை</strong></p><p><strong>வ</strong>றுமையின் </p><p>பொருட்டு </p><p>மந்திரக் குழலெடுத்து </p><p>அவன் </p><p>ஊதத் தொடங்குகிறான்</p><p>வீட்டிலிருந்த</p><p>பீடை எலிகள் </p><p>ஒவ்வொன்றாய்</p><p>வெளியேறத் தொடங்குகின்றன.</p><p>மெதுவாய்</p><p>பின்தொடர்ந்த </p><p>எலிகளோடு </p><p>சமூகத்தில் அவனை</p><p>வறுமைக்குத் தள்ளிய</p><p>அத்தனை எலிகளும் </p><p>அணிவகுப்பில்</p><p>சேர்ந்துகொண்டன.</p><p>ஆறு ஒன்று </p><p>எதிர்ப்படுகிறது</p><p>எலிகள் அத்தனையும் </p><p>வீடு திரும்பிவிட்டன.</p><p><em>- பா.ரமேஷ்</em></p>.<p><strong>பாசியாடை</strong></p><p><strong>ஓ</strong>டாமல் தேங்கிய நீரினை </p><p>வெட்கம் பாடாய்ப் படுத்தும்</p><p>ஆடையாய்ப் பாசியை </p><p>அவசரமாய் நெய்து </p><p>தன் அங்கத்தில் உடுத்தும்.</p><p> <em>- வல்லம் தாஜுபால்</em></p>