<p><span style="font-size: medium;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span></span>றதிநோயால் அவதிப்படும் ஹீரோ, மறக்காமல் அதை மறைத்துக் காதலிக்கிறார். இறுதியில், மறதி நோயை வென்றாரா, காதலியைக் கரம் பிடித்தாரா என்பதே படத்தின் ஒன்லைன். </p>.<p>பெட்ரோல் பில்லின் பின்னால் எழுதிவிட முடியும் இந்தக் கதையை, இரண்டரை மணி நேர நான் ஸ்டாப் காமெடி காக்டெய்லாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார். ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்கள் தந்து தமிழில் `A’டல்ட் காமெடி இயக்குநர் எனப் பெயரெடுத்தவரின் ‘U’ டர்ன் தான் இந்தப் படம். </p>.<p><br /> <br /> தெலுங்கில் ஹிட் அடித்த ‘பலே பலே மஹாதிவோய்’ படத்தின் ரீமேக் தான் இந்த கஜினிகாந்த். மறதியை மறைத்து சமாளிபிகேஷன் தட்டும் இடத்திலும் மாட்டிக்கொண்டு பல்புகள் வாங்கும் இடத்தில் ஆர்யா அசால்ட்டுதான். ஆனால் எமோஷனல் ஆகும் இடங்களில் தடுமாறுவது தெரிகிறது.<br /> <br /> சாயிஷா..! `பார்த்தவுடன் காதலித்துவிடவும்!’ சொல்ல வைக்கும் அழகு. நடனத்தையும் நடிப்பையும் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார். <br /> <br /> சம்பத், `ஆடுகளம்’ நரேன், சதீஷ், கருணாகரன், ராஜேந்திரன், உமா பத்மநாபன், காளிவெங்கட் என நிறைய கேரக்டர்கள் இருக்கிறார்கள். சம்பத்தைத் தவிர எல்லோரும் சிரிக்க வைக்க மெனக்கெட்டிருக் கிறார்கள். ஆர்யாவின் பெற்றோராக வரும் நரேன் - உமா கூட்டணி சம்பத்தை சமாளிக்க அண்ணன் - தங்கையாக வேஷம் போடும் இடத்தில் தியேட்டரே அதிர்ந்து சிரிக்கிறது. சதீஷுக்கு `கூடவே வரும் செவ்வாழை’ ரோல். மனிதர் தன் வழக்கமான; நமக்குப் பழக்கமான ஒன்லைனர்களால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் கடுப்படிக்கிறார். </p>.<p>பல்லுவின் `பளிச்’ ஒளிப்பதிவும், பிரசன்னா ஜி.கேவின் `நறுக்’ எடிட்டிங்கும் காமெடி படத்தையும் விறுவிறுப்பாக்குகின்றன. இசைதான் படத்தின் பெரிய ஸ்பீடு பிரேக். பாடல்கள் ஒவ்வொன்றும் மினி இன்டெர்வெல்!<br /> <br /> லிஜீஷின் வில்லன் ரோல் பவர்ஃபுல்லாக இல்லாமல் படம் முழுக்க இடைச்செருகலாகவே இருக்கிறது. டயலாக் போர்ஷனில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் சீரியல் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.<br /> <br /> அந்த க்ளைமாக்ஸ் காட்சியெல்லாம் சிரிக்கவும் வைக்காமல் பரபரக்கவும் வைக்காமல் கடுப்பேற்றுகிறது. தமிழுக்கு ஏற்றாற்போல காமெடி ட்ரீட்மென்ட்டில்... சில பல திரைக்கதை மாற்றங்களைத் தயவுதாட்சண்யமின்றி செய்திருந்தால் படம் இன்னும் வேற லெவலுக்குச் சென்றிருக்கும். <br /> <br /> ஆனாலும், லாஜிக்கையெல்லாம் மறந்து சிரிக்க வைத்த இந்த மறதிக்கார கஜினிகாந்தை மறக்காமல் ஒருமுறை பார்க்கலாம்!<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - விகடன் விமர்சனக் குழு </strong></span></p>
<p><span style="font-size: medium;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span></span>றதிநோயால் அவதிப்படும் ஹீரோ, மறக்காமல் அதை மறைத்துக் காதலிக்கிறார். இறுதியில், மறதி நோயை வென்றாரா, காதலியைக் கரம் பிடித்தாரா என்பதே படத்தின் ஒன்லைன். </p>.<p>பெட்ரோல் பில்லின் பின்னால் எழுதிவிட முடியும் இந்தக் கதையை, இரண்டரை மணி நேர நான் ஸ்டாப் காமெடி காக்டெய்லாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார். ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்கள் தந்து தமிழில் `A’டல்ட் காமெடி இயக்குநர் எனப் பெயரெடுத்தவரின் ‘U’ டர்ன் தான் இந்தப் படம். </p>.<p><br /> <br /> தெலுங்கில் ஹிட் அடித்த ‘பலே பலே மஹாதிவோய்’ படத்தின் ரீமேக் தான் இந்த கஜினிகாந்த். மறதியை மறைத்து சமாளிபிகேஷன் தட்டும் இடத்திலும் மாட்டிக்கொண்டு பல்புகள் வாங்கும் இடத்தில் ஆர்யா அசால்ட்டுதான். ஆனால் எமோஷனல் ஆகும் இடங்களில் தடுமாறுவது தெரிகிறது.<br /> <br /> சாயிஷா..! `பார்த்தவுடன் காதலித்துவிடவும்!’ சொல்ல வைக்கும் அழகு. நடனத்தையும் நடிப்பையும் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார். <br /> <br /> சம்பத், `ஆடுகளம்’ நரேன், சதீஷ், கருணாகரன், ராஜேந்திரன், உமா பத்மநாபன், காளிவெங்கட் என நிறைய கேரக்டர்கள் இருக்கிறார்கள். சம்பத்தைத் தவிர எல்லோரும் சிரிக்க வைக்க மெனக்கெட்டிருக் கிறார்கள். ஆர்யாவின் பெற்றோராக வரும் நரேன் - உமா கூட்டணி சம்பத்தை சமாளிக்க அண்ணன் - தங்கையாக வேஷம் போடும் இடத்தில் தியேட்டரே அதிர்ந்து சிரிக்கிறது. சதீஷுக்கு `கூடவே வரும் செவ்வாழை’ ரோல். மனிதர் தன் வழக்கமான; நமக்குப் பழக்கமான ஒன்லைனர்களால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் கடுப்படிக்கிறார். </p>.<p>பல்லுவின் `பளிச்’ ஒளிப்பதிவும், பிரசன்னா ஜி.கேவின் `நறுக்’ எடிட்டிங்கும் காமெடி படத்தையும் விறுவிறுப்பாக்குகின்றன. இசைதான் படத்தின் பெரிய ஸ்பீடு பிரேக். பாடல்கள் ஒவ்வொன்றும் மினி இன்டெர்வெல்!<br /> <br /> லிஜீஷின் வில்லன் ரோல் பவர்ஃபுல்லாக இல்லாமல் படம் முழுக்க இடைச்செருகலாகவே இருக்கிறது. டயலாக் போர்ஷனில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் சீரியல் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.<br /> <br /> அந்த க்ளைமாக்ஸ் காட்சியெல்லாம் சிரிக்கவும் வைக்காமல் பரபரக்கவும் வைக்காமல் கடுப்பேற்றுகிறது. தமிழுக்கு ஏற்றாற்போல காமெடி ட்ரீட்மென்ட்டில்... சில பல திரைக்கதை மாற்றங்களைத் தயவுதாட்சண்யமின்றி செய்திருந்தால் படம் இன்னும் வேற லெவலுக்குச் சென்றிருக்கும். <br /> <br /> ஆனாலும், லாஜிக்கையெல்லாம் மறந்து சிரிக்க வைத்த இந்த மறதிக்கார கஜினிகாந்தை மறக்காமல் ஒருமுறை பார்க்கலாம்!<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - விகடன் விமர்சனக் குழு </strong></span></p>