<p><strong>த</strong>மிழ் சினிமா காமெடி டைம் லைனில் தங்களுக்கென ஸ்பெஷல் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் வடிவேலுவுக்கும் சந்தானத்திற்கும் இடையேயான வித்தியாசங்கள் இவை...</p>.<p>பேஸ்மென்ட்டும் பில்டிங்கும் அரசியலில் வீக் என்றாலும், உடல்மொழியிலும் காமெடியிலும் படு ஸ்ட்ராங். தன்னைத்தானே கிண்டல் செய்து இதயங்களில் இடம் பிடித்து எக்கச்சக்கமாய்க் காசு அள்ளியவர்!</p>.<p>கவுண்டமணியின் 2.0 வெர்ஷன் இவர். ரைமிங் டைமிங் என இரட்டைப் பாதையில் காமெடி வண்டியைக் கவனமாய் ஓட்டுபவர்!</p>.<p>'வந்துட்டான்யா வந்துட்டான்’, 'மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு’, 'இப்பவே கண்ணக் கட்டுதே’ வசனங்களை இவர் ஒருமுறை உச்சரித்தால், தமிழர்கள் தினமும் பலமுறை உச்சரிக்கிறார்கள். இவருடைய வசனங்கள் பல ட்விட்டர் ஃபேஸ்புக்குகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது!</p>.<p>இவரது அப்பாடக்கரும் நண்பேன்டாவும் செம ஃபேமஸ்தான். ஆனால் வடிவேலுவோடு ஒப்பிட்டால், அவர்தான் கரெக்ட்டு கரெக்ட்டு, மிரட்டு மிரட்டு!</p>.<p>அரசியலில் ஆழம் பார்த்து அடிபட்டதால் 'பீ கேர்ஃபுல்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார்!</p>.<p>'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ இனிப்பு வெற்றியைத் தந்தாலும், பூந்தியை என்கிட்டே இருந்து திருடிட்டாங்க என்று முருங்கைக்காய்க்காரர் முறுக்கிக்கொண்டு கோர்ட் படி ஏறி இருப்பதால், சந்தானத்துக்குக் கொஞ்சம் சிக்கல்தான்!</p>.<p>தேர்தலில் வாய்ஸ் கொடுத்து வாயைப் புண்ணாக்கிக்கொண்டதால், கைப்புள்ளைக்குக் கட்டம் சரி இல்லாமல் போனது!</p>.<p>கைப்புள்ளைக்குச் சரியில்லாமல் போன கட்டத்திலேயே 'ரைட்டா... ரைட்டு’ என்று காமெடி பாண்டி ஆடி வருகிறார் பார்த்தா!</p>.<p>ரஜினிகாந்த் போன்ற ஹீரோக்களுக்கே சித்தப்பு, மாமா உறவுமுறையில்தான் படங்களில் வருவார். படு யூத்தாக வந்த படம் அநேகமாக 'காதலன்’, 'மிஸ்டர் ரோமியா’வுமாகத்தான் இருக்கும்.</p>.<p>ஒன்ஸ் அப்பான் எ டைம் சின்னிஜெயந்த் போல இப்போதைய யூத் ஹீரோக்களுக்கு இவர்தான் காலேஜ்மேட். சுமார் யூத் ஹீரோக்களின் படங்களுக்கு எலெக்ட்ரிக் எனர்ஜி ஏற்றும் ஆல் இன் ஆல் அப்பாடக்கர் இவர்!</p>.<p>ஹீரோவாக முதல் படம் 'இம்சை அரசனில்’ தாரை, தப்பட்டைகள் கிழித்துத் தொங்கவிட்டார். இரண்டாவது படம் 'இந்திரலோகத்தில் அழகப்பன்’ கந்தரகோலம் ஆனது!</p>.<p>இரண்டு ஹீரோக்களில் ஒருவராக முதல் படம் 'அறை எண் 305’ அறைந்து சாத்தியது. மூன்று ஹீரோக்களில் ஒருவராக 'லட்டு’... அடை... தே...ன்ன்ன்ன் அடைதான்! </p>.<p>- <strong>ஆர்.சரண்</strong>, சீலன்</p>
<p><strong>த</strong>மிழ் சினிமா காமெடி டைம் லைனில் தங்களுக்கென ஸ்பெஷல் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் வடிவேலுவுக்கும் சந்தானத்திற்கும் இடையேயான வித்தியாசங்கள் இவை...</p>.<p>பேஸ்மென்ட்டும் பில்டிங்கும் அரசியலில் வீக் என்றாலும், உடல்மொழியிலும் காமெடியிலும் படு ஸ்ட்ராங். தன்னைத்தானே கிண்டல் செய்து இதயங்களில் இடம் பிடித்து எக்கச்சக்கமாய்க் காசு அள்ளியவர்!</p>.<p>கவுண்டமணியின் 2.0 வெர்ஷன் இவர். ரைமிங் டைமிங் என இரட்டைப் பாதையில் காமெடி வண்டியைக் கவனமாய் ஓட்டுபவர்!</p>.<p>'வந்துட்டான்யா வந்துட்டான்’, 'மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு’, 'இப்பவே கண்ணக் கட்டுதே’ வசனங்களை இவர் ஒருமுறை உச்சரித்தால், தமிழர்கள் தினமும் பலமுறை உச்சரிக்கிறார்கள். இவருடைய வசனங்கள் பல ட்விட்டர் ஃபேஸ்புக்குகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது!</p>.<p>இவரது அப்பாடக்கரும் நண்பேன்டாவும் செம ஃபேமஸ்தான். ஆனால் வடிவேலுவோடு ஒப்பிட்டால், அவர்தான் கரெக்ட்டு கரெக்ட்டு, மிரட்டு மிரட்டு!</p>.<p>அரசியலில் ஆழம் பார்த்து அடிபட்டதால் 'பீ கேர்ஃபுல்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார்!</p>.<p>'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ இனிப்பு வெற்றியைத் தந்தாலும், பூந்தியை என்கிட்டே இருந்து திருடிட்டாங்க என்று முருங்கைக்காய்க்காரர் முறுக்கிக்கொண்டு கோர்ட் படி ஏறி இருப்பதால், சந்தானத்துக்குக் கொஞ்சம் சிக்கல்தான்!</p>.<p>தேர்தலில் வாய்ஸ் கொடுத்து வாயைப் புண்ணாக்கிக்கொண்டதால், கைப்புள்ளைக்குக் கட்டம் சரி இல்லாமல் போனது!</p>.<p>கைப்புள்ளைக்குச் சரியில்லாமல் போன கட்டத்திலேயே 'ரைட்டா... ரைட்டு’ என்று காமெடி பாண்டி ஆடி வருகிறார் பார்த்தா!</p>.<p>ரஜினிகாந்த் போன்ற ஹீரோக்களுக்கே சித்தப்பு, மாமா உறவுமுறையில்தான் படங்களில் வருவார். படு யூத்தாக வந்த படம் அநேகமாக 'காதலன்’, 'மிஸ்டர் ரோமியா’வுமாகத்தான் இருக்கும்.</p>.<p>ஒன்ஸ் அப்பான் எ டைம் சின்னிஜெயந்த் போல இப்போதைய யூத் ஹீரோக்களுக்கு இவர்தான் காலேஜ்மேட். சுமார் யூத் ஹீரோக்களின் படங்களுக்கு எலெக்ட்ரிக் எனர்ஜி ஏற்றும் ஆல் இன் ஆல் அப்பாடக்கர் இவர்!</p>.<p>ஹீரோவாக முதல் படம் 'இம்சை அரசனில்’ தாரை, தப்பட்டைகள் கிழித்துத் தொங்கவிட்டார். இரண்டாவது படம் 'இந்திரலோகத்தில் அழகப்பன்’ கந்தரகோலம் ஆனது!</p>.<p>இரண்டு ஹீரோக்களில் ஒருவராக முதல் படம் 'அறை எண் 305’ அறைந்து சாத்தியது. மூன்று ஹீரோக்களில் ஒருவராக 'லட்டு’... அடை... தே...ன்ன்ன்ன் அடைதான்! </p>.<p>- <strong>ஆர்.சரண்</strong>, சீலன்</p>