''மதுரைலதான் இருக்கேன். லாக்டெளன் முடிஞ்சவுடனே சென்னைக்கு வந்துடுவேன். நானும், பாக்யராஜ் சாரும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே இந்த ப்ராஜெக்ட்ல கமிட்டானோம். அப்போ எடுத்த போட்டோதான் இப்போ சோஷியல் மீடியால ஷேர் ஆகிட்டிருக்கு.''
'முந்தானை முடிச்சு' படத்தை ரீமேக் பண்ணலாம்கிற ஐடியா எப்போ வந்துச்சு?

''சின்ன வயசுல இருந்தே பாக்யராஜ் சாரின் படங்கள் பார்த்துப் பழகினவன் நான். அவரோட மூணு படங்கள் எப்பவும் எனக்கு ஆல்டைம் ஃபேவரைட். இதுல ஒண்ணு 'முந்தானை முடிச்சு.' இந்தப் படத்தை சின்ன வயசுல ரொம்ப ரசிச்சிப் பார்த்திருக்கேன். பாக்யராஜ் சார்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ஆசையிருந்தது. அதுக்காக முயற்சியும் பண்ணேன். ஏற்கெனவே ஒரு படத்தை ரீமேக் பண்றதா இருந்தது. ஆனா, சில காரணங்களால் அது நடக்கல. இந்த நேரத்துலதான் தயாரிப்பாளர் சதீஷூக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கு. அப்போதான் பாக்யராஜ் சாரை நேர்ல மீட் பண்ணிப் பேசினோம். அவரும் எங்ககூட சேர்ந்து வேலை பார்க்க ஆர்வமா இருந்தார். 'முந்தானை முடிச்சு' ஃபேமிலி என்டர்டெய்னர். இதை ரீமேக் பண்ணலாமா?'னு கேட்டேன். உடனே, பாக்யராஜ் சாரும் ஓகே சொல்லிட்டார்.''
'முந்தானை முடிச்சு' படத்தை இயக்கிய பாக்யராஜே இந்த ரீமேக்கையும் இயக்குறாரா?

''இல்லை, சார் ஸ்க்ரிப்ட் வொர்க் மட்டும்தான் பண்றார். எனக்கும் மற்ற படங்களின் கமிட்மென்ட் இருக்குறதுனால நடிப்பு மட்டும்தான். படத்துக்கான இயக்குநரைத் தேடிட்டு இருக்கோம். 'முந்தானை முடிச்சு' படத்தை அப்படியே ரீமேக் பண்றோம். அதனால, சார் பண்ணுனா வாத்தியார் கேரக்டர்ல நான் நடிக்குறேன். இப்போ இருக்குற யங் ஜெனரேஷன் யாரும் இந்தப் படத்தைப் பார்த்து இருப்பாங்களானு தெரியல. அதனால, இப்போ இருக்குற பசங்களும் ரசிக்கிற மாதிரி படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கோம். கிராமம்தான் கதைக்களம். நல்ல லொகேஷனைத் தேடிக்கிட்டு இருக்கோம். தவிர இது 'முந்தானை முடிச்சு' ரீமேக்தானே தவிர பார்ட்- 2 இல்லை. அதனால படத்தோட பேரும் 'முந்தானை முடிச்சு'தான். இதைவிட பொருத்தமான பேர் இந்தப் படத்துக்குக் கிடைக்காது. ஹீரோயின், மியூசிக் டைரக்டர் யார்னு இன்னும் முடிவாகல. கூடிய சீக்கிரம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். பாக்யராஜ் சாரின் ஃபேமஸான முருங்கைக்காய் சமாசாரம் இந்தப் படத்துல இருக்கும். அதோட சுவை குறையாம நாங்களும் கொடுப்போம். இந்தப் படத்துல வந்த சின்ன கேரக்டர்கூட ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க. அதனால, ரீமேக் பண்றப்போ இதுக்கு ஏத்த மாதிரியான ஆர்டிஸ்ட்டை தேடிட்டு இருக்கோம்.''
ஏவிஎம் நிறுவனம் இந்தப் படத்துக்கான ரீமேக் உரிமைக்கு சம்மதம் சொல்லிட்டாங்களா?
''ஏவிஎம்-க்கு முழு சம்மதம். பாக்யராஜ் சாரே அவங்ககிட்ட பேசிட்டார். இந்தப் படம் நாங்க பண்றதுல அவங்களுக்கும் சந்தோஷம்தான்.''
காவல்துறையோட தன்னார்வலரா வேலை பார்த்தது பற்றி?
''சென்னையில இருந்த நாள்களை விட நான் மதுரைல இருந்ததுதான் அதிகம். இந்த இக்கட்டான சூழல்ல மதுரைல முடிஞ்சளவுக்குத் தன்னார்வாலரா வேலை பார்க்கலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். மதுரை காவல் துறை சார்பாகவும் என்னைத் தொடர்பு கொண்டாங்க. ரொம்ப மனநிறைவுடன் இந்தப் பணியை செஞ்சேன். எல்லாரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குறது ரொம்ப நல்லது.''