சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘கயல்’. இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் அபி நவ்யா. இவருக்கும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘என்றென்றும் புன்னகை’ தொடர் நாயகன் தீபக்கிற்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடைய காதல் கல்யாணம் குறித்து அபி நவ்யாவிடம் பேசிய போது, "என்னுடைய நண்பரின் நண்பர், தீபக். சும்மா ஃபிரெண்டா பேச ஆரம்பிச்சோம். ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சிருந்தது. அவரே எங்க வீட்டிலும், அவர் வீட்டிலும் பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினார்!" எனக் கூறியிருந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தீபக் டிக்டாக்கில் பிரபலமான முகம். டிக்டாக் மூலமாகத்தான் அவர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் தான் இவருடைய முதல் சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’விலும் இவர் நடிக்கிறார். இதுதவிர, அபி நவ்யா ஜெ தொலைக்காட்சியில் நியூஸ் ஆங்கராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நேற்று நடைபெற்ற இவர்களுடைய திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சென்னை மாங்காட்டில் இன்று (27.01.2022) அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.