
கடந்த வாரம் ஸ்கிரீனுக்குப் பின்னால் நடந்த ஒரு மாற்றம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் `டாக் ஆஃப் தி டிவி'யாக இருந்தது.


சிருஷ்டி டாங்கே, விக்ராந்த் இருவரையும் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ளப் பேசியி ருந்தார்களாம். அதைத் தெரிந்துகொண்டுதான் முந்திக்கொண்டதாம் `சர்வைவர்' டீம்.


சீரியல்களில் `இவருக்குப் பதில் இவர்' என மாறுவது சகஜம். ஆனால், கடந்த வாரம் ஸ்கிரீனுக்குப் பின்னால் நடந்த ஒரு மாற்றம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் `டாக் ஆஃப் தி டிவி'யாக இருந்தது. ஜீ தமிழ் சேனலில் முக்கியப் பொறுப்பிலிருந்த தமிழ்தாசன் வெளியேற, ஜீ தமிழ் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் வசன கர்த்தாவான ரமணகிரிவாசன்.

‘விக்ரம்' படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம் மகேஸ்வரி. வி.ஜே, சீரியல் நடிகை, காஸ்டியூம் டிசைனர் எனப் பல அவதாரங்கள் எடுத்துவிட்டாலும், சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறபோது அது பேசப்பட வேண்டுமென நினைத்தாராம். அது இப்போது நடந்துள்ளதாகக் கருதுகிறார்.

விஜய் டிவியில் ஆரம்பத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளில் தலை காட்டிய அனில், நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டபின் டிவியில் இருந்து முழுவதுமாக ஒதுங் கினார். பிறகு மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகி தற்போது விவாகரத்து வழக்கு நிலுவையிலிருக்கிற சூழலில் மறுபடியும் `சித்திரம் பேசுதடி' சீரியல் மூலம் டிவி பக்கம் வந்திருக்கிறார்.

இயக்குநர் பாரதிராஜா மகன், மனோஜ் இயக்குநரும் நடிகரு மான பாண்டியராஜன் மகன் பிருத்வி ஆகிய இருவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்களாம். யோசிக்க அவகாசம் கேட்டிருப்பதாகச் சொல் கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...
சீரியல் தயாரிப்பாளர் சங்கத்தின் சீனியர் நடிகை சென்னையின் பிரபலமான அந்தக் கல்லூரியில் தன் இரண்டாவது மகளுக்கு மீடியா படிப்பு படிக்க சீட் கேட்டிருக்கிறார். கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டதாம். `உங்க முதல் பொண்ணுக்கு சீட் கொடுத்தோம்; வகுப்புக்குச் சரியா வராம பாதியிலேயே நிறுத்திட்டாங்க. எனவே ஒரு சீட்டை விரயமாக்க முடியாது' எனக் காரணம் சொல்லப்பட்டதாம். ஆனாலும் விடாமல் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார் நடிகை.